என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » கொல்கத்தா நகராட்சி
நீங்கள் தேடியது "கொல்கத்தா நகராட்சி"
பள்ளி சீருடை, ஷூ ஆகியவற்றை தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக குடை வழங்கும் திட்டத்தை கொல்கத்தா நகராட்சி அறிவித்துள்ளது. #FreeUmbrellas #KolkataMunicipalCorporation
கொல்கத்தா:
அனைத்து மாணவர்களும் கல்வி கற்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாநில அரசுகள் அவர்களுக்கு தேவையான கல்வியை இலவசமாக வழங்கி வருகின்றன. மேலும், மாணவர்களுக்கு தேவைப்படும் சீருடைகள், ஷூக்கள் உள்ளிட்டவற்றை இலவசமாக அளித்து வருகின்றன.
இந்நிலையில், மேற்கு வங்காள மாநிலத்தின் கொல்கத்தா நகராட்சி மாணவ, மாணவியருக்கு இலவச குடை மற்றும் ரெயின்கோட் ஆகியவற்றை வழங்க முடிவு செய்துள்ளது.
கோடைக்காலத்தில் வெயிலில் இருந்து மாணவர்கள் தப்பிக்கவும், மழைக்காலத்தில் மாணவர்களின் வருகை குறைவை தடுக்கும் வகையிலும், ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையிலும் இந்த திட்டத்தை அறிவித்துள்ளதாக கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் சுமார் 35 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். #FreeUmbrellas #KolkataMunicipalCorporation
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X